
ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை வந்தவரின் பணப்பை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
ஹிக்கடுவ, வவுலகொட மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இத்தாலி நாட்டவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
வெளிநாட்டவரின் பையில் 100 யூரோ பணம், 30,000 ரூபாய் இலங்கை பணம், பெறுமதியான கண்ணாடி, ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.