அமைச்சர்…

அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் உறுத

மீனவர் பிரச்சினைக்கு அவசர தீர்வுகாண இரு தரப்பும் இணக்கம் நெருங்கிய நட்பு நாடான இலங்கைக்கு இந்தியா என்றும் இணக்கமாக துணை நிற்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் அவசியத்தின் அவசரத்தன்மையினை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் புதுடெல்லியில் இடம்பெற்றது.நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த போது ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுகிய மற்றும் நடுத்தரகால பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களை செயற்படுத்துவதற்காக நிதியமைச்சர் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.இலங்கை நெருக்கடியான சூழ்நிலையினை எதிர்கொண்டுள்ள போது இந்தியாவினால் வழங்கப்பட்ட அனைத்து உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்திய பிரதமரிடம் நன்றியினை தெரிவித்தார்.

நெருங்கிய நட்பு நாடான இலங்கையுடன் இந்தியா எப்போதும் ஒத்துழைப்புடன் துணை நிற்கும் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி நிதியமைச்சரிடம் குறிப்பிட்டார்.

இவ்விஜயத்தின் போது இருதரப்பு பிரமுகர்களுக்குமிடையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டன. எரிசக்தி, டிஜிட்டல் தொழினுட்பம், சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சேதன பசளை திட்டம் குறித்து இந்திய பிரதமரும், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் கலந்துரையாடினர். சேதன பசனை பயன்பாட்டின் நன்மை மற்றும் இலங்கைக்கு பொருத்தமானதாக அமைய கூடிய நெனோ நைட்ரஜன் யூரியா திரவ உரங்கள் உள்ளிட்ட தொழினுட்பங்கள் மற்றும் தயாரிப்புக்கள் குறித்து இந்தியா விவசாயத்துறையின் அனுபவத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி வள அபிவிருத்தியின் ஒத்துழைப்பு பரஸ்பர நன்மை பயக்கும் என்பதால் அதனை இருதரப்பினரும் சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டும் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

இலங்கையில் இராமாயனத்தை பிரபல்யப்படுத்துவதும் இந்தியாவில் குஜராத் உட்பட இந்தியா முழுவதும் பௌத்த கோட்பாட்டை பிரபல்யப்படுத்துவதும் இலங்கைக்கு அதிக இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான வழிமுறையாக அமையும்.

2009ஆம் ஆண்டு இலங்கைக்கும் குஜராத் மாநிலத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுற்றுலாத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்வது அவசியமாகும்.

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்இநிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் விரிவாக கலந்துரையாடினர்.

மீனவர்களை மனிதாபிமான முறையில் நடத்துதல் வாழ்வாதாரம் கடல் சூழல் பாதுகாப்பு கைது செய்யபபட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள் ஆகியவற்றை முன்கூட்டியே விடுவித்தல் உள்ளிட்ட சிக்கலான மற்றும் பல பரிமாண அம்சங்களை அங்கிகரித்துள்ளனர்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டிய அவசியத்தை இருதரப்பினர் ஏற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *