
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எரிபொருள் கப்பலை நாளை விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள்.
அனைத்து எரிபொருள் தாங்கிகளும் நேற்று முன்தினமே செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளன.
எனினும், இன்று முதல் அந்த எரிபொருள் தாங்கிகள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகலில் நிறைவடையும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பில் உள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தலா ஒரு தாங்கி டீசல் மற்றும் பெட்ரோல் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.