
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் மேற்குப் பகுதியில் ஹெரோய்னை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 27 வயதான இளைஞர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் ஹெரோய்ன் விற்பனையில் இளைஞர் ஒருவர் ஈடுபடுவதாக கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இளைஞரை சோதனைக்குட்படுத்திய போது அவரின் உடமையிலிருந்து 300 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து இளைஞருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.