தெய்வத்தமிழ் தோத்திரத்திரட்டு நூல் வெளியீட்டு விழா

அகில இலங்கை சைவ மகா சபையால் தெய்வத்தமிழ் தோத்திரத்திரட்டு வெளியீட்டு விழா இன்று நுவரெலியா காயத்திரி பீடத்தில் இடம் பெற்றது.

மாதாந்த ரீதியாக நுவரெலியா காயத்திரி பீடத்தில் இடம்பெறுகின்ற பௌர்ணமி தின மகாயாகத்தினை தொடர்ந்து இவ் நூல் வெளியீட்டு விழா
வைபவரீதியாக வெளியீடு செய்யப்பட்டது.

இதன் போது பண்டாரவளை மற்றும் ஹப்புத்தலை அறநெறி பாடசாலைகளுக்கும் தோத்திர திரட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன .

இதன்போது அகில இலங்கை சைவ மகாசபையினர், தமிழ்ச்சைவப்பேரவையினர், சிவதொண்டர்கள்,சிவமங்கையர் ,நுவரெலியா காயத்திரி பீட அறங்காவலர் சக்திவேல் சந்திரமோகன்,மலையக நவநாத சித்தர்,அறநெறி பாடசாலை ஆசிரியர்கள்,அறநேறி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *