மே.தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ரூட்டின் சதத்தின் துணையுடன் இங்கிலாந்து 244-3

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநேர முடிவில் அணித்தலைவர் ஜோ ரூட், 119 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

பார்படோஸ் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ஓட்டங்களை பெற்றது.

அலெக்ஸ் லீஸ் 30 ஓட்டங்களுடனும் ஸெக் க்ரெவ்லி ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் டேனியல் லோவ்ரன்ஸ் 91 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜெய்டன் சீல்ஸ், வீராசாமி பெருமாள் மற்றும் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இன்னமும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து இன்று தொடரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *