
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அரசு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்குவது என்பது தீர்வாக அமையாது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
காணாமல் போன உறவுகளுக்கு ஒரு லட்சம் ரூபா கொடுப்பது என்பது,அவரின் இழப்புகளுக்கு தீர்வாக அமையாது.
ஒரு உயிருக்கு பெறுமதி ஒரு லட்சம் ரூபா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
காணாமல் போன உறவுகளுடன் நான் கதைத்து இருக்கின்றேன்.
அவர்கள் அதிலிருந்து தாண்ட முடியாமல் உள்ளனர்.அவர்க்ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தாலிக்கொடியை கூட கழட்ட முடியாத அளவுக்கு அவர்கள் உள்ளனர்.
இந்த தொகை அவர்களுக்கு ஒரு உடனடி மருந்து.ஆனால் நிச்சயமாக அவர்களுக்கு தீர்வு வேண்டும் , நியாயம் வேண்டும். அதை நோக்கி பயணிக்க வேண்டும் என்றார்.