
கிண்ணியா – மாஞ்சாலை, பெரிய கிண்ணியா, அடப்பனார்வயல்,குட்டிக்கராச்சி முதலான பகுதிகளிலுள்ள பேக்கரி உற்பத்திப் பொருள் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோதுமை மாவின் விலையேற்றம் காரணமாக சில பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.
பேக்கரி உரிமையாளர்கள் சிலர் கோதுமை மாவைப் பெற்றுக் கொள்வதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன், பாவனையாளர்களும் பேக்கரி உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில்,
மாவுக்கு முன்னரெல்லாம் 2 ரூபா, 4 ரூபா தான் விலை ஏறும். இப்ப 35 ரூபா உயர்ந்துள்ளது. இந்த மாவினால் எப்படி வேலை செய்றது.
இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது. வழிநடத்துவதற்கு என்ன ஏற்பாடு செய்துள்ளது.
விலை குறையுமா?குறையாதா? மேலும் மேலும் அதிகரிக்குமா? 5 ரூபா 10 ரூபா மாவிலையானது காலத்திலிருந்து செய்து கொண்டிருக்கிறோம்.
நான் 40 வருடமாக இந்தத் தொழிலை செய்து வருகிறேன். மாவு விலை ஏற்றத்தினால் இன்று லீவு எடுக்க வேண்டியுள்ளது எனவும் ஒருவர் தெரிவித்தார்.
4 குடும்பங்கள் கூலி வேலை செய்கிறார்கள். சீனிவிலை, மாவு விலை, ஈஸ்ட் விலை, எண்ணெய் விலை 3000/= ரூபா விற்ற, இப்ப 5000/= ரூபா என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை .இதைச் செய்வதா, விடுவதா?
16 வருடமாக செய்து வருகிறேன் இப்படி ஒரு விலை ஏற்றத்தை எந்த ஆட்சியிலும் காணவில்லை.
கடைக்குப் போனால் ஒரு நாளைக்கு ஒரு விலை வேலைக்காரர்களுக்கு கூலியை கூட்டிக் கேட்கிறார்கள், அவர்களும் வருவதில்லை. இந்த நிலையில் நாம் என்ன செய்வது?
அரசாங்கம் ஒழுங்கான நிர்ணயிக்கப்பட்ட விலையைக் கொண்டு வரனும்.
பாண் இல்லை, பணிஸ் இல்லை, றஸ்க் இல்லை பிள்ளைக்கு மாவினால் ஆன காலை, மாலை சாப்பாடு இல்லை.
ஒரு பிள்ளைக்கு 200 ரூபா செலவு போகிறது. 3 பிள்ளைக்கும் 600 ரூபா போகிறது. கூலித் தொழில் செய்ற நாங்கள் எப்படி வாழ்வது. என செய்கையாளர்கள் இவ்வாறு கருத்துரைத்தனர்.