யாழ் மாவட்டத்தில் கிராம மட்டத்திலான உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில்,விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்டச் செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
யாழ் மாவட்ட அரசாங்க க.மகேசன் தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன,அமைச்சின் செயலாளர்,வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா,கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ,நாடளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

