
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக,மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை பெறுகின்றனர்.
இந்த நிலையில் மேல் மாகாணத்தில் மக்கள் பலர் வரிசையில் நின்றுள்ளனர்.
இதன் போது திடீரென வாகனத்துடன் வருகை தந்த சீன நாட்டு பெண் பிரஜை ஒருவர்,வரிசையை முந்திக்கொண்டு செல்ல முற்பட்டுள்ளார் சென்றுள்ளார்.
இதனை அவதானித்த ஏனையவர்கள்,நாம் நீண்ட நேரமாக இங்கே நிற்கின்றோம்,இது சீனா இல்லை,ஒழுங்கை பற்றுங்கள் என்று கூறி வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து குறித்த சீனப் பெண் மன்னிப்பு கேட்டு சென்றுள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.