உணவக நீர்த்தாங்கியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

வெலிமடை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் நீர்த்தாங்கியில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

குறித்த உணவகத்தில் பணியாற்றிய நபர் ஒருவரே, குறித்த நீர்த்தாங்கியில் வீழ்ந்து உயரிழந்தாரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அம்பகஸ்தோவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய குறித்த நபர், நீண்டகாலமாக நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *