
74 வருடகால சாபக்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை கொழும்பில் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இதற்கமைய தொழிநுட்பக் கல்லூரி சந்தி, மருதானை முதல் கோட்டை வரையிலான வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.