வவுனியா சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய இளம் கைதி

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது மதிக்கக்தக்க இளைஞரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இவ்வாறு தப்பிச் சென்ற இக்கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *