
யாழ் மாவட்டச் செயலகத்தில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான இன்றைய கலந்துரையாடலில் இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டது:
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட,காஸ்,எரிபொருள்,கட்டட பொருட்கள் என அனைத்தும் பற்றாக்குறை நிலவுகிறது.
அதை அதிக விலையில் வாங்குவதற்கு மக்களிடம் பணமும் இல்லை.மக்கள் அல்லல் படுகின்றனர் இதற்கு ஒரு தீர்வைத் தாருங்கள் என இன்றைய கலந்துரையாடலில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன:
இரண்டு வாரங்களில் எல்லா பிரச்சினைகளும் தீரும்.கவலைப் பட வேண்டாம். இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளோம்.என்றார்.