கொழும்பில் டீசல் விநியோகத்திற்கு விதிக்கப்பட்ட இறுக்கமான கட்டுப்பாடு

கொழும்பு மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வாகனம் ஒன்றிற்கு 10 லீற்றர் டீசல் மாத்திரமே வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் வாகனம் ஒன்றிற்கு 10 லீற்றருக்கு மேல் டீசல் வழங்க கூடாதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக வந்த கப்பலிலுள்ள டீசலை சபுகஸ்கந்தவில் சேமித்து வைக்க முடியாததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக டீசல் கப்பலில் இருந்த டீசலை முத்துராஜவெலயில் இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், இந்த நிலைமையிலேயே தற்போது பிரச்சினை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *