வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் எவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும், நுவரெலியா வசந்தகால கொண்டாட்டம் நடாத்தப்படுமென வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பெருமளவான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கலந்துகொள்வதன் காரணமாக அவர்களுக்கான பாதுகாப்பினை வழங்க வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *