மலையக மக்களின் பிரச்சனை தொடர்பில் பேசுவதிற்கு தகுதியில்லா இராஜாங்க அமைச்சர்-சிவநேசன் சீற்றம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் மலையக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோதுமை மாவின் விலையை அதிகரித்து அம்மக்களுக்கு அரசாங்கம் மீண்டும் நெருக்கடி கொடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மலையக பகுதிகளில் ரொட்டி பிரதான உணவாக உள்ளது. அதற்காக கோதுமை மா பயன்படுத்தப்படுகின்றது. தற்போது மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பை எதிர்த்து, அதனை குறைக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஆளுங்கட்சியிலுள்ள மலையக பிரதிநிதிகளுக்கு முதுகெலும்பில்லை என தெரிவித்தார்.

மேலும் மலையக மக்களுடைய வாக்குகளை பெற்று கொண்ட இராஜாங்க அமைச்சர் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தகுதியில்லாமல் இந்தியா சென்றுள்ளார். அன்று தந்தை செய்ததை இன்று மகன் செய்கிறார்.

அத்தோடு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இ.தொ.கா. இன்று மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினை பெற்றுக் கொடுக்காமல் கை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

எனவே மலையக பெருந்தோட்ட மக்களிடம் வாக்குகளை பெற்று கொண்டு அமைச்சி பதவியில் இருக்கும் இ.தொ.கா மக்களின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்திற்கு அளுத்தங்களை வழங்கி மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் தீர்வினை பெற்று கொடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *