‘பங்கபந்து’ கபடி போட்டிக்காக இலங்கை அணி, பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டது!

பங்களாதேஷின் டாக்காவில் ஏழு நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள ”பங்கபந்து” சர்வதேச (ஆண்கள்)கபடிப்போட்டியில் இலங்கை தேசிய கபடி அணி பங்கேற்கின்றது .

போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி பங்களாதேஷ் நோக்கி புற்ப்பட்டுள்ளது.

கடந்த வாரம் டொரிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் விளையாட்டு அமைச்சினால் கூட்டப்பட்ட தெரிவுப்போட்டியில் 80 வீரர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், இதிலிருந்து பங்கபந்து தொடருக்கான தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தொடரில் தொடரை நடத்தும் பங்களாதேஷ் உட்பட இலங்கை,இங்கிலாந்து,கென்யா,நேபாளம்,ஈரான்,இந்தோனேஷியா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன .

”பங்கபந்து”கிண்ண சர்வதேச கபடிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கபடி அணியின் தலைவராக லஹிரு நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *