
தமிழர் விடுதலைக்கு கூட்டணியின் பொதுச் சபைக் கூட்டத்தில் வீ.ஆனந்தசங்கரி வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கட்சியின் நிர்வாகச் செயலாளர் கௌரிகாந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடாக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஆகிவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்றது.
104 பேர் சபையில் அங்கத்துவம் வகிக்கிறார்கள். 48 பேர் கடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதிலே அடுத்த பொதுக் கூட்டம் எப்போது என்று கலந்துரையாடப்பட்டது. சங்கரி ஐயா அந்தக் கூட்டத்திலே பெரும்பான்மை இல்லாத காரணத்தினாலும், அந்தக் கூட்டத்தில் தானே தலைமை வகிக்கவும், செயலாளராக கதைக்கவும் விரும்பினார்.
என்றாலும் தலைமை உரை நிறைவடைந்த பின்னர் தான் சங்கரி ஐயா உரையாற்றினார். அத்துடன் அவர் கூட்டத்திலே எழும்பித் திரிந்து குழம்பினார், தாக்குவதற்கும் முற்பட்டார். அந்த வேளை அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை பிடித்து அமைதிப்படுத்தினார்கள்.
அவருக்கு உதவியாக ஒரு பெண்ணும் வந்திருந்தார். அவரின் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் பெரும்பாலான விடயங்களை ஐயா கதைத்தார். பின்னர் எழும்பி வெளியே சென்று விட்டார்.
நீங்களே நடாத்துங்கள் என்று கூறிவிட்டார். அதன் பின்னர் 29 ஆம் திகதி ஜனவரி மாதம் கூட்டம் நடைபெற்றது. அதற்கும் சங்கரி ஐயாவுக்கு, அங்கத்தவர்கள் அனைவருக்கும் அறிவிப்பு வழங்கப்பட்டது. எனினும் சங்கரி ஐயா வரவில்லை. எனினும் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.- என்றார்.