விபத்தில் காயமடைந்த பெண் மரணம்!

முச்சக்கர வண்டியால் மோதப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து கடந்த 14ஆம் திகதி நடந்தது.

சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு பிள்ளையை ஏற்றுவதற்காக மீசாலை வடக்கில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த 52 வயதுப் பெண்ணை முச்சக்கரவண்டி ஒன்று மோதி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், முச்சக்கர வண்டி தொடர்பாகத் தகவல் தெரிந்தோர் விவரங்களை வழங்க முடியும் என்றும் சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *