யாழுக்கு சனியன்று வருகிறார் மஹிந்த!

தென்மராட்சி பிரிவுக்குட்பட்ட மட்டுவில்– புத்தூர் வீதியிலுள்ள வண்ணாத்திப்பாலத்துக்கு அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைமறுதினம் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது.

யாழ்.மாவட்ட செயலக ஏற்பாட்டில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டு மத்திய நிலையத்தையும் வர்த்தகத் தொகுதிகளையும் வைபவரீதியாகத் திறந்து வைக்கவுள்ளார்.

யாழ்.மாவட்ட விவசாய உற்பத்திப் பொருள்களை கொள்வனவு செய்வதற்கு வசதியாக மத்திய நிலையத்துடன் இணைந்த 30க்கும் மேற்பட்ட வர்த்தகக் கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *