இராணுவத்தை  தயார்நிலையில், வைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது – ராஜ்நாத் சிங்

அனைத்து நேரங்களிலும், இராணுவத்தை  தயார்நிலையில், வைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”உலகின் பலம் பொருந்திய நாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. நமது இராணுவத் தேவைகளும் அதிகரித்துள்ளன.

இராணுவ படைகளை நவீனமாக்கிக்கொண்டு இருப்பதே காலத்தின் தேவையாகும்.  எல்லா நேரங்களிலும், இராணுவ படைகளை தயார்நிலையில் வைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இராணுவக் கட்டமைப்பின் பலத்தை பெருக்கிக் கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.  தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் டிஆர்டிஓ வின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *