நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இரவு பகல் பாராது எரிபொருளை பெறுவதற்காக மக்கள் வரிசையில் நீண்ட நேரம் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக மண்ணெய், மற்றும் டீசலுக்கு அதிக வரிசை காணப்படுகிறது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் சித்தன்கேணி பகுதியில் கிராம சேவகரால் வழங்கப்படும் குடும்ப பங்கீட்டு அட்டை காண்பித்து, டோக்கன் முறையில் எரிபொருள் இன்று வழங்கப்படுகிறது. எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காகமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்துள்ளனர்.

