தந்தை ஒப்பந்தக் கொலை மகனும் கொலையாளியும் கைது

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சம்பவம்

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு கரடியனாற்று பிரதேசத்தில் தனது தந்தையை ஐம்பதினாயிரம் ரூபாய் கொடுத்து ஒப்பந்தக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகனையும் கொலையாளியையும் பொலிசார் கைது செய்துள்ளனர். வெட்டி கொலை செய்த 21 வயதுடைய ஒப்பந்த கொலையாளியும் கொல்லப்பட்டவரின் 22 வயதுடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் நேற்று வியாழக்கிழமை (17) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை (13) கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வயல் பகுதியில் வேளான்மை காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றில் இருந்து வெட்டுகாயங்களுடன் விவசாயியான 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் ஆறுமுகம் என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.குறித்த விவசாயிக்கு 3 பெண் பிள்ளைகளும் 22 வயதுடைய ஒரு ஆண் பிள்ளையுமாக 4 பிள்ளைகளின் தந்தையான இவர் மாட்டுபட்டிக்கு சொந்தமான இவர் விவசாயம் மேற்கொண்டு வருகின்றார் இந்த நிலையில்,இவரின் 22 வயதுடைய சிந்துஜனான மகன்,மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளதனால் மதுபானம் வாங்க தந்ததையிடம் பணம் கேட்பது மற்றும் தனது மாட்டுப்பட்டியிலுள்ள மாடுகளை திருடிவிற்பது போன்ற நடவடிக்கையால் தந்தைக்கும் இவனுக்கும் இடையே  தொடர்ந்து தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது.இதனையடுத்து சிந்துஜன் தனது தந்தையை கொலை செய்ய கிரான் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான  இட்ணராஜா நிரோசன் என்பனை கடந்த முதலம் திகதி (1-3-2022) சந்தித்து தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாக அவனிடம் பேரம் பேசியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து அவனிடம் தொலைபேசில் பலமுறை தொடர்பு கொண்டு தந்தை கொலை தொடர்பாக வினாவி வந்துள்ளான். இதன் பின்னர் கொலை செய்வதற்கான திட்டம் தீட்டி கடந்த 12ம் திகதி (12-3-2022)  இரவு 9 மணியளலில் படுகொலை செய்யப்பட்ட பரசுராமனின் வேளாண்மை காவலுக்காக வயிலில் உள்ள கொட்டகைக்கு தனிமையில் சென்று காவலில் ஈடுபட்டுள்ளார்.

பரசுராமன் தனிமையில் சென்றிருப்பதை அறிந்த கூலிக்கு கொலை செய்ய அமர்த்தப்பட்ட இட்ணராஜா நிரோசன் அந்த கொட்டகைக்கு சென்றபோது மகனின் நண்பனான  நிரோசனை கண்ட பரசுராமன் அவனுடன் பேசிக் கொண்டு அவனுக்கும்  இரவு உணவை கொடுத்து இருவரும் சேர்ந்து உணவு உண்டுள்ளனர். அதிகாலை 3.30 மணியளவில் கொலை செய்ய சென்றவன், கண்விழித்து பார்த்தபோது பரசுராமன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதை கண்டு அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவரின் தலையில் போட்டபோது அவர்  உயிரிழக்காததையடுத்து,அவன் கொண்டு சென்ற கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளான் அப்போதும் அவருக்கு உயிர் போகவில்லை .

அதனைத் தொடர்ந்து தனது இடுப்பிலுள்ள நாடா ஒன்றை எடுத்து அவரின் கழுத்தை சுற்றி இழுத்து நெரித்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பி அதிகாலை 4 மணியவில் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன் தனது நண்பனிடம் தொலைபேசி ஊடாக தகவலை தெரிவித்துள்ளான்.

தந்தையை கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே பேரம் பேசியவாறு பணத்தை கொடுப்பதற்காக தனது நண்பணை தேடி  14ம் திகதி திங்கட்கிழமை கிரான் பகுதிக்கு சென்று சந்தித்து பேசிக்கொண்டு பின்னர். இருவரும் மோட்டர்சைக்கிளில்  அங்கிருந்து வந்தாறுமூலை பகுதியிலுள்ள  நகைகக்கடை ஒன்றின் முன்னால் சென்று நண்பனை நிற்குமாறு தெரிவித்து நகைக்கடைக்கு சென்று அங்கு தங்க ஆபரணம் ஒன்றை ஈடுவைத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு அதனை கொலை செய்த நண்பணிடம் வழங்கியுள்ளான். இந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தி. மற்றும் நாடா, கல் என்பவற்றை போலீசார் மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *