தங்கப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விலையேற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலை என்றுமில்லாதவாறு உயர்வடைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கொழும்பு – செட்டியார் தெரு தங்க நகை வர்த்தகர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

22 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

தங்கத்தின் விலை உயர்வுக்கு டொலர் பற்றாக்குறையும் காரணம் எனவும் ரஷ்யா உக்ரைன் யுத்த நிலைமையும் எதிர்பாராத தங்க விலை அதிகரிப்புக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2000 டொலர்கள் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *