முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்களில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு, இந்திய அரசின் உதவியில் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) சி.குணபாலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய துணைத்தூதுவர் இராகேஸ் நடராஜன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் வி.கலிஸ்ரன், கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மீனவர்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்

