
நாட்டில் மேலும் 288 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனாதொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 657,723 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 3 பேர் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 16,422 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 5,247 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 24,440 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் தற்போது 16,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.