மக்கள் கடும் எதிர்ப்பு; தடுத்து நிறுத்தப்பட்டது மோட்டார் சைக்கிள் பேரணி

மீரிகமையிலிருந்து கராப்பிட்டி ஊடாக அநுராதபுரம் வரை செல்லவிருந்த மோட்டார் சைக்கிள் பேரணி பொது மக்களின் எதிர்ப்பையடுத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஸ்பின் ரைடர் கிளப் என்ற தனியார் மோட்டார் சைக்கிள் அமைப்பொன்றால் 17 – 19 ஆம் திகதி வரை குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, அதற்கு நிபந்தனைகளுடன் பொலிஸாரால் அனுமதியும் வழங்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டமையால், பேரணியைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு குறித்த மோட்டார் சைக்கிள் பேரணியின் போது போக்குவரத்து விதிமுறைகள் அல்லது பொலிஸாரால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *