பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு படகில் 301 கிலோகிராம் ஹரோயின் போதைப் பொருளை கடத்திவந்த 4 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 7 பேரை இந்திய இலைங்கை கடல் பகுதியில் வைத்து கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.ரி.ஏ.ரி தாரக சுபேத கடற்படையுடன் இணைந்து கைது செய்து நேற்று சனிக்கிழமை (04) கொழும்பு கடற்படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மட்டு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவித்தார்.
மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.ரி.ஏ.ரி தாரக சுபேதவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையில் கிழக்கு மாகண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் ஜ.என்.கருணாரட்ன மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க ஆகியோரின் மேற்பார்வையில்,
இந்த விசேட நடவடிக்கை கடந்த மாதம், மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.ரி.ஏ.ரி தாரக சுபேத தலைமையிலான புலனாய்வு பிரிவினரான ஜெயசேன, சப்இன்பெஸ்டர் சுகத் பண்டார, எச்.பி.ஏ.எஸ். உதயகுமார , ஆர். புருசோத்மன், மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.கே. பண்டார ஆகியோர் கடற்படையுடன், இணைந்து இலங்கை இந்திய கடல் பரப்பில் இரவு பகலாக ஹரோயின் போதைப் பொருள் கடத்தல் காரரை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த முதலாம் திகதி அதிகாலை 4 மணியளவில் குறித்த படகு இலங்கை இந்திய கடலில் வைத்து மடக்கிபிடித்தபோது படகில் இருந்து 301 கிலோக்கிராம் ஹரோயின் போதைப் பொருளை மீட்டதுடன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை கடலில் இருந்து கொழும்பு கடற்படை முகாமிற்கு இன்று அழைத்துவரப்பட்டனர்.
இந்த போதைபோருள்களை பொலிஸ் மா அதிபர் சென்று பார்வையிட்தன் பினர் அவர்களை சிஜடி யினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும். இந்த ஹரோயின் போதை பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.





