நேற்று வரை 816 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

உக்ரேனில் நேற்று வரை குறைந்தது 816 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,333 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

ஐ.நா உரிமைகள் அலுவலகத்தின்படி, பெரும்பாலான உயிரிழப்புகள் கனரக பீரங்கிகள், ஷெல் குண்டு தாக்குதல், ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் போன்றவற்றால் ஏற்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேரியோபோல் உள்ளிட்ட மோசமான பாதிப்பிற்குள்ளான சில நகரங்களில் இருந்து ஐ.நா உரிமைகள் அலுவலகத்தால் தகவல்களைச் சேகரிக்க முடியாததால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *