அண்டை நாடுகளுக்கு இடம் பெயரும் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள்

கீவ், மார்ச் 19

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 3-வது வாரத்தை கடந்துள்ளது. ரஷ்ய படைகள் தாக்குதலின் வேகத்தை அதிகரித்து வருவதால் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் இருந்து ஏற்கனவே 30 லட்சத்து 20 ஆயிரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் 6.5 மில்லியன் மக்கள் உக்ரைனுக்குள் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.வுக்கான புலம் பெயர்ந்தோர் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *