
நோர்வே, மார்ச் 19
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 3-வது வாரத்தை கடந்துள்ளது. ரஷ்ய படைகள் தாக்குதலின் வேகத்தை அதிகரித்து வருவதால் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.
இந்தநிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்து வருகின்றன. இதில் நார்வே நாடும் இணைந்துள்ளது. நார்வேயில் இருந்து பொருட்கள், சேவைகள், மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நோர்வே அறிவித்துள்ளது.