
யாழ்ப்பாணத்தில் உள்ள பெருமளவான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சுழற்சி முறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நேற்று சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் அனுப்பப்பட்டுள்ள நிலையில், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது.