
யாழ்ப்பாணத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் இன்று வரவுள்ளது. அவற்றை கடும் கண்காணிப்பின் கீழ் பகிர்ந்தளிக்குமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையை முதன்மைப்படுத்திய வகையில் மண்ணெண்ணெய் பங்கிடப்படவுள்ளது. இவ்வாறு பகிரும்போது விவசாயம் மற்றும் மீன்பிடி சமூகத்தின் தேவை கருதி அவர்களை முன்னிலைப்படுத்துமாறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.