தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கலானது!

தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் விவசாயத்திற்கான தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022 மற்றும் 23 ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, விதை மானியம், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க சலுகைகள் உள்ளிட்ட கவர்ச்சிகர அறிவிப்புகள் இதில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *