
இலங்கைக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெர்ரி ரைஸ் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கைக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடற்ற நோட்டுக்கள் அச்சடிப்புக் காரணமாக பணப் புழக்கத்தை குறைவாக வைத்திருக்க இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கின்றது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச அடுத்த மாதம் வொஷிங்டன் வரவுள்ள நிலையில், அவரது இந்தப் பயணம் இலங்கைக்கு உதவுவதற்கான சிறந்த வழியைத் தீர்மானிக்கும் – என்றார்.