ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டில் ஆசிரியர் தன்னை அவமானப்படுத்தினார் என 30 ஆண்டுகளுக்குப்பின் அவரை 101 முறை கத்தியால் குத்தி மாணவர் ஒருவர் கொலை செய்துள்ளார்.
1990-ஆம் ஆண்டு 7 வயதான மாணவனை குறித்த ஆசிரியர் அடித்து அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் கோபமடைந்த குறித்த மாணவன் 30 வருடங்களுக்குப் பின் அந்த ஆசிரியரை (வயது– 59) கண்டறிந்து கடந்த ஆண்டு 101 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கொலைசெய்து சுமார் 16 மாதங்களின் பின் தற்போது அந்த மாணவனைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த மாணவனை விசாரணைக்கு உட்படுத்தியபோது,
‘‘சிறுவயதில் தன்னை அவமானப் படுத்திய ஆசிரியரை பழிவாங்குவதற்காக கொலை செய்தேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.