
நாட்டில் தங்கத்தின் விலை நேற்றுப் புதிய உச்சத்தை அடைந்தது. இதன்படி ஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தது.
இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பும் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 700 ரூபாவாக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை இந்த வார ஆரம்பத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாவாகக் காணப்பட்டது. 24 கரட் ஒரு பவுண் தூயதங்கம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.