பெண் சுகாதார ஊழியர் மீது தாக்குதல்

திருகோணமலை – மூதூர் தள வைத்தியசாலையில் கடமை புரியும் பெண் சுகாதார சிற்றூழியர் ஒருவரை வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர் ஒருவர் தாக்கியுள்ளதாகவும், அப்பெண் சிற்றூழியர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் 28 வயதுடையே சிற்றூழியர் ஒருவரே தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து மூதூர் தள வைத்தியசாலையில் கடமைபுரியும் சிற்றூழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்பின் மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருடன் சிற்றூழியர்கள் நடாத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பிரச்சினை சுமூக நிலைக்கு வந்ததோடு 10.30 மணியிலிருந்து சுகாதார ஊழியர்கள் தமது கடமைகளை வழமைபோன்று செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *