20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 20,000 மெற்றிக் தொன் விமானங்களுக்கான எரிபொருளை ஏற்றி வந்துள்ள கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே ஆறு நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது.அந்த கப்பலில் இருந்து எரிபொருளை இறக்குவதற்கு தேவையான டொலர்கள் வழங்கப்படாததே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.தேவையான அளவு டொலர்களை தனியார் வங்கிகளிடம் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ள போதிலும், நாட்டின் முன்னணி தனியார் வங்கிகள் கூட தேவையான அளவு டொலர்களை வழங்க முடியாது என கைவிரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
