
கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர், கிருஷ்ணபுரம் உள்ளிட்ட சில இடங்களில் நேற்று வீசிய மினி சூறாவளியால் பல வீடுகள் சேதமடைந்தன. இன்னபல உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டது.
நேற்று இரவு வரையான தகவல் சேகரிப்பின்படி செல்வாநகர் பிரதேசத்தில் 3 வீடுகளும், கிருஷ்ணபுரம் பிரதேசத்தில் 5 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்தன. வாகனங்களுக்கு மீது மரங்கள் முறிந்து விழுந்தமையால் சில வாகனங்களும் பெரும் சேதத்துக்கு உள்ளாகின.