
காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக 9 மாதப் பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் டென்ஜான்சிகா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை நெடுந்தீவு மருத்துவமனைக்குப் பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர்.
முதல்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. எனினும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டுவரும் முன்னரே குழந்தை உயிரிழந்துள்ளது.