பேருந்து கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்!

இலங்கையில் அடுத்த மூன்று மாத காலத்துக்குள் பேருந்து கட்டணம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 25 வீதத்தால் பேருந்து கட்டணம் உயரும் எனவும்இ ஆரம்பக் கட்டணமாக 25 அல்லது 30 ரூபா நிர்ணயிக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.

வருடாந்த பேருந்து கட்டண மீளாய்வின் அடிப்படையிலேயே இந்தக் கட்டண உயர்வு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளைஇ நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து சில நாட்களுக்கு முன்னரே பேருந்து கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *