மட்டுவில் கஞ்சா செடி வளர்த்த பெண் ஒருவர் கைது

மட்டு, மார்ச் 19

மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளர்

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் நட்த்தியதில் வீட்டில் வளர்த்து வந்த 5 அடி உயரமன கஞ்சா செடியை மீட்டதுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *