யாழ். கந்தரோடையில் புதிதாக அமைக்கப்படவுள்ள புத்தர்சிலை – எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் – கந்தரோடைப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த நிலையில் கந்தரோடையிலுள்ள விகாரைக்கு செல்லவுள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில் இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்து கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இத்துடன், கந்தரோடையில் புதிதாக புத்தர்சிலை அமைக்கப்படவுள்ளதாக தெரிவந்ததை அடுத்து, குறித்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, குறித்த பகுதிக்கான பிரதமர் மஹிந்தவின் விஜயம் திடீரென இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *