
மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி, பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றைய தினம் மாலை கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை நேற்றைய தினம் முற்றுகையிட்டுள்ளனர்.
இவ்வேளையின் போது வீட்டில் வைத்து வளர்த்து வரப்பட்ட 5 அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளதுடன்
இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரை கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .