சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை – எதிர்க்கட்சி

சர்வகட்சி கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான அழைப்பு இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சர்வகட்சி கூட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்தார்.

அழைப்பை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்து கட்சியின் நாடாளுமன்ற குழு மற்றும் நிர்வாகக் குழுவினால் தீர்மானிக்கப்படும் என கூறினார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்காத சூழ்நிலையில் இவ்வாறான சர்வகட்சி கூட்டம் நடத்தப்படுமா என்பது சந்தேகமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *