கட்டுமான பொருட்களின் விலையில் உயர்வு

சந்தையில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக கட்டுமானத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து கடந்த சில தினங்களாக சீமெந்து, இரும்பு உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் நாட்டில் கட்டுமானத் துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் சில கட்டுமானப் பணிகளுக்காக ஒப்பந்தக்காரர்களுக்கு அரசாங்கம் மேலதிக பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது .

கட்டுமானத் தொழில் எதிர்நோக்கும்சிக்கல்களுக்கு முகங்கொடுத்து பெருமளவிலான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது .

அதேசமயம், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சீமெந்து உற்பத்தியும் பல பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக ´சங்ஸ்தா´ சீமெந்து நிறுவனத்தின் தலைவர் நந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிர்மாணத்துறை எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் கிராமப்புற வீடமைப்பு, நிர்மாணப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டுக்கான மாநில அமைச்சிடம் வினவியபோது, ​​கட்டுமானத் துறைக்கான கட்டுமானப் பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் இல்லை என்றாலும் அவற்றின் விலை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டதனை ,அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *