இலங்கையின் பண வீக்கம் பாரியளவில் அதிகரிப்பு

இலங்கையில் இந்த மாதத்தில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பானது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறாக தெரிவித்திருந்தார் .

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் பணவீக்கம் சுமார் 25 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்..

இலங்கையின் பணவீக்கம் பெப்ரவரியில் 16.8 வீதமாக உயர்ந்துள்ளது, இது ஆசியாவிலேயே அதிகூடியதாகும் எனவும் மேலும் தெரிவித்திருந்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *