அரசில் விலக தருணம் பார்த்து காத்திருக்கும் அமைச்சர்கள்!

நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பாக அதிருப்தியடைந்துள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர், முக்கியமான தருணத்தில் அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் பகிரப்பட்ட விதம் தொடர்பாக இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இதன் பின்னர் அரசாங்கம் பின்பற்றிய கொள்கை தொடர்பாகவும் இவர்களுக்கு அதிருப்தி இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், அண்மை காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இவர்களில் அதிருப்தியை மேலும் அதிகரிக்க செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *